செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Sep 24, 2024 03:53:59 PM

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே ஆசாரிவிளையை சேர்ந்த 90 வயதான பனையேறும் தொழிலாளி ஒருவர், நோய்வாய்பட்டு  படுத்த படுக்கையான தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

">

“காலமெல்லாம் உடனிருப்பேன்” என்று அக்னி சாட்சியாய் கரம் பற்றிய மனைவியை தனது 90 வது வயதில் க்ழுத்தை அறுத்து கொன்று விட்டோமே என்று பெரியவர் கண் கலங்கி அமர்ந்திருக்கும் காட்சிகள் தான் இவை..!

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே ஆசாரிவிளையை சேர்ந்த 90 வயதான பனையேறும் தொழிலாளி சந்திர போஸ்.

தனது 3 மகன்களும் 3 மகள்களும் பேரப்பிள்ளைகளுடன் அவரவர் வீடுகளில் வசித்து வரும் நிலையில் , மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த வயது முதிர்ந்த தம்பதியை உடனிருந்து கவனிக்காவிட்டாலும், மாதத்திற்கு ஒருவர் என தினமும் 3 வேளையும் ஷிப்ட் முறையில் மகன்கள் உணவு வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பே வயது முதிர்வால் மனைவி படுத்த படுக்கையானாலும் 3 வருடங்களுக்கு முன்பு வரை தானே உழைத்து மனைவியை பராமரித்து வந்துள்ளார் போஸ்.

கண்பார்வை தெரியாமல் போனதாலும், வயது முதிர்வாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை போஸுக்கு ஏற்பட்டதால் மனைவியை பராமரிக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது

எப்போதும் படுத்தே கிடந்ததால் அவரது மனைவிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வலி தாங்காமல் இரவெல்லாம் கதறித்துடித்ததாக கூரப்படுகின்றது.

இதனை கண்டு மனம் கலங்கிபோன பெரியவர் போஸ், மனைவியை கருணை கொலை செய்ய முடிவெடுத்து திங்கட்கிழமை காலை கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து போட்டு விட்டு, வாசலில் அழுதபடியே அமர்ந்திருந்ததாக கூறப்படுகின்றது

மதிய உணவு கொடுக்க வந்த இளைய மகன் சாந்த்குமார், அழுதபடி இருந்த தனது தந்தையை கடந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது தாய் லட்சுமி சடலமாக கிடப்பதை கண்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டி லட்சுமியின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பார்வைக்குறைபாடால் அவதிப்பட்ட பெரியவர் சந்திர போஸ் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் உடன் இருந்து பராமரிக்க தவறியதால் , பெரியவர் தனது மனைவியை கருணை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
குமரி மாவட்டத்தில் காணாமல் போன 1,000 செல்போன்கள் மீட்பு...
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
மாணவர்கள் காலணியுடன்செல்வதால் வகுப்பறை குப்பையாவதாக புகார்.. சுத்தம் செய்த மேயர் சுந்தரி..
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக திரைப்பட இயக்குநர் மோகன் கைது...
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பு மனு தள்ளுபடி... சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும்
தனியார் பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர் போராட்டம்... கல்வி, தேர்வு கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டதாகப் புகார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement