செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்

Sep 19, 2024 08:02:38 AM

வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர் கும்பலாக தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

போதையில் பாதை மாறி காரை ஓட்டிச்சென்றதால் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி வருவதாக நினைத்து பெங்களூரு பாய்ஸை பொதுமக்கள் தாக்கிய காட்சிகள் தான் இவை..!

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த கருப்பு நிற கிரிட்டா கார் ஒன்று ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. போலீசார் அந்த காரை நோக்கிச்சென்றதும், ஓட்டுனர் காரை பின்பக்கமாக இயக்க தொடங்கினார். நேரு பஜாருக்குள், ரிவர்ஸில் வேகமாக புகுந்தது

போலீசார் அந்த காரை விரட்டினர். அரசு பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால் காரை ஓட்டிவந்தவர்கள் காரை நிறுத்தினர். இருவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில் காருக்குள் இருந்த இருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

விபத்து ஏற்படுத்தி விட்டுத்தான் காருடன் தப்பி வந்திருப்பதாக கருதி அங்கு கூடிய இளைஞர்களில் சிலர் காரை கல்வீசி தாக்கி உடைத்ததோடு, காரில் இருந்த அந்த இருவரையும் வெளியே இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினர்

தாக்குதலில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச்செல்ல போலீசார் முயன்ற நிலையிலும், விடாமல் சட்டை கிழிந்த நிலையில் காணப்பட்ட இளைஞரை விரட்டி விரட்டி தாக்கினர்

கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். விசாரணையில் பெங்களூரை சேர்ந்த கிரிதரயாதவ், உடற்கல்வி ஆசிரியரான முகமது முஸ்தபா, தருண், பிரஞ்சவ் ஆகியோர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மூக்கு முட்ட குடித்து விட்டு வாகனத்தை ஓட்டிவந்த நிலையில் போலீசில் இருந்து தப்பிப்பதற்காக காரை ரிவர்ஸில் ஓட்டிச்சென்றதாக போலீசில் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி வருவதாக தவறாக நினைத்து காரை அடித்து உடைத்த உள்ளூர் இளைஞர்களை போலீசார் வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement