செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு - 6 பேர் கைது

May 25, 2024 03:57:42 PM

யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெயரிலான யூடியூப் பக்கத்தில் தேர்தல் முறைக்கு எதிராகவும், உலகம் முழுவதும் கிலாபத் என்ற இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவருவது குறித்தும் வீடியோ வெளியிட்டு பரப்புரை செய்த அமீர் உசேனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அமீர் உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் 1953 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டில் நிறுவப்பட்ட ஹஸ்ப் உத் தஹீரிர் என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தது தெரியவந்தது. துருக்கியில் 1924ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒட்டோமான் காலிஃபா ஆட்சி என்ற இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிறுவ வேண்டும் என்பதும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கத்தின் பிரதான நோக்கமாகக் கூறப்படுகிறது.

தங்களது யூடியூப் வீடியோவிற்கு லைக் போடும் நபர்களை சென்னை இராயப்பேட்டையில் நடத்தும் ரகசிய கூட்டத்திற்கு வரவழைத்து மூளைச்சலவை செய்து இந்த அமைப்பில் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டதின் கீழ் மூவரையும் கைது செய்த போலீசார் இராயப்பேட்டை, தாம்பரம், தண்டையார்பேட்டையில் நடத்திய சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், செல்போன், சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், மூளையாக செயல்பட்ட அமீர் உசேன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement