மக்களவை தேர்தல் வாக்களிப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா ஒரு "பிங்க்" நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்காக, பெண்களே நிர்வகிக்கும் விதமாக அந்த சாவடிகளில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாகவே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவற்றில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் மற்றும் முதிய பெண்களுக்கு, தனி வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.