செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

3 ஆண்டு சிறை.. 50 லட்சம் அபராதம்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Dec 21, 2023 06:29:05 PM

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கடந்த 2011-இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் இருந்து இருவரையும் விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 2016-இல் விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 2017-இல் மேல் முறையீடு செய்தது. அதன் மீது கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமானத்துக்கு அதிகமாக 64 புள்ளி 9 சதவீதம் அதிக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என்று அறிவித்து, தண்டனை விவாரங்களை வியாழனன்று அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இதன்பேரில் பொன்முடி மற்றும் அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆஜராயினர். தங்களது வயது மற்றும் மருத்துவக் காரணங்களில் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு இருவரும் நீதிபதியிடம் வாய்மொழியாக கேட்டுக்கொண்டனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் சமூகத்தின் மீது ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை செலுத்தாவிட்டால் 6 மாத சிறை தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தார்.

பொன்முடி மற்றும் அவரது மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய ஜனவரி 22-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அன்றைய தினம் சரணடையாவிட்டால் விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்தார்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement