செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை மாநகராட்சியில் அவசர கால ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

Nov 30, 2023 09:36:18 PM

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை வடிகால் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் விவரித்தனர்.

ஆய்வின் போது, அவசரகால கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த சில அழைப்புகளுக்கு தாமே பதிலளித்தார் முதலமைச்சர், தொலைபேசியில் அழைத்தவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும், கன மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

ஆய்வு பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 162 மழை நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 பம்ப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்பார்வையிட முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement