சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்த தாயின் ஆண் நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னீர்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்த அம்சவல்லி என்பவர் கணவரை பிரிந்த நிலையில் 4 வருடங்களாக ராஜூ என்பவருடன் முறையற்ற உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கம் போல அம்சவல்லி வேலைக்கு சென்ற போது அவரது வீட்டிற்கு சென்ற ராஜூ தன்னிடம் இருந்த சாவியால் வீட்டை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த மகள் சங்கீதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு கம்மல், கொலுசு, பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.