செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாடிக்கையாளரின் "பிக்சட் டெபாசிட்" பணத்தை நூதன முறையில் திருடிய நண்பர்கள் கைது

Apr 20, 2022 10:11:15 AM

சென்னையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து, நிதி நிறுவனத்தில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து, வாடிக்கையாளரின் பிக்சட் டெபாசிட் தொகை 75 லட்ச ரூபாயை நூதன முறையில் கையாடல் செய்த நண்பர்களை, போலீசார் கைது செய்தனர்.

மாயா அரவிந்தாக்ஷன் என்ற 80 வயது பெண்மணி, பி.என்.பி ஹவுசிங் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் 75 லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட் வைத்துள்ளார். அமெரிக்காவில் மகன் வீட்டில் வசித்த அவர் கடந்தாண்டு உயிரிழந்தார். 

ஈமச்சடங்கிற்காக மகன் சந்திரசேகர் சென்னை வந்த போது, தாயார் பெயரில் IDFC வங்கியில் இருந்து பாஸ்புக் வந்துள்ளது. அந்த வங்கியை அவர் அணுகிய போது, பி.என்.பி ஹவுசிங்-கில் இருந்த அவரது தாயாரின் பிக்சட் டெபாசிட் தொகை, IDFC வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் பி.என்.பி ஹவுசிங்-கை அணுகிய போது, ஏற்கனவே அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பிக்சட் டெபாசிட் பிரிவின் மேலாளர் ராஜா சுந்தர் மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் ஹக்கீம் பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த ராஜாசுந்தர் மற்றும் ஹக்கீமை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையில், இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் என்பதும், ஆடம்பரமாக வாழ ஆசை பட்ட ராஜா சுந்தருக்கு ஏராளமான கடன்கள் இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் வசித்த மாயா அரவிந்தாக்ஷன் தனது பிக்சட் டெபாசிட்டை புதுப்பிக்குமாறு ராஜா சுந்தரிடம் தெரிவித்துள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்தை பெற்ற ராஜா சுந்தர், அதன் மூலம் மாயாவின் பெயரில் IDFC வங்கியில் புது கணக்கை தொடங்கி, பி.என்.பி-யில் இருந்த பிக்சட் டெபாசிட் தொகை 75 லட்ச ரூபாயை அந்த வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை வெளியே எடுத்துள்ளது தெரியவந்தது.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement