எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
இதற்கான தரவரிசைப் பட்டியலில் 1,806 பேர் இடம் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.
பின்னர் வரும் 30-ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.