செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையை மிரட்டும் கொரோனா...அதிகரிக்கும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை...

May 02, 2020 09:07:56 AM

நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அரசின் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

 நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது. இதில் 219 பேர் குணமடைந்த நிலையில் , 841 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் மண்டலங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 259 பேர், ராயபுரத்தில் 216 பேர், தேனாம்பேட்டையில் 132 பேர் மற்றும் கோடம்பாக்கத்தில் 116 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும் சென்னையில் நோய்த்தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 பெண் மருத்துவர்கள் உட்பட 3 பேருக்கும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மருத்துவருக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, திரு.வி.க நகர் மண்டலத்தில் 49 பகுதிகள், ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 28 பகுதிகளும் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் ஆண்களே என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 20-29 வயதுக்குட்பட்டவர்கள் 242 பேருக்கும், 30-39 வயதுக்குட்பட்டவர்கள் 237 பேருக்கும், 40-49 வயதுக்குட்பட்டவர்கள் 195 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், நேற்று மட்டும் புதியதாக 5 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, 9 வயதுக்குட்பட்டு 34 குழந்தைகள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் வெளிமாநில மற்றும் மாவட்டங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு பெற, இனி யாரும் நேரில் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின் படி அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில ஈ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இனி குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் விண்ணப்பித்து அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement
குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement