செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நள்ளிரவில் மது அருந்தி கேளிக்கை... 276 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

Feb 07, 2020 12:37:53 PM

கொடைக்கானல் அருகே மலைகிராமத்தில் நள்ளிரவில் மதுஅருந்தி  கேளிக்கையில் ஈடுபட்டபோது பிடிபட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேரை  போலீஸார் எச்சரித்து அனுப்பினர். 

திண்டுக்கல்லை சேர்ந்த நிதீஷ்குமார், தருண் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கிராமமான குண்டுபட்டியில் தனியார் தோட்டத்தில் 6ம் தேதி நள்ளிரவு மதுவுடன் கேளிக்கை விருந்து நடப்பதாகவும், இதற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் என்றும் விளம்பரம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டும் இதேபோல கேளிக்கை விருந்து நடத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேர் கட்டணம் செலுத்தி குண்டுபட்டியில் திரண்டனர். பின்னர் நள்ளிரவு 2 மணி முதல் மது அருந்தி ஆடல் பாடலுடன் 276 பேரும் கேளிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த ரகசியத் தகவலின்பேரில், சுமார் 3 மணியளவில் அப்பகுதியை சுமார் 80 போலீஸார் சுற்றிவளைத்தனர். பின்னர் அங்கிருந்த 276 பேரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, மீண்டும் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து 276 பேரையும் போலீஸார் திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து 276 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

எனினும், அனுமதியின்றி இரவு நேரத்தில் கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்த நிதீஷ்குமார், தருண் ஆகியோரையும், கேளிக்கை நிகழ்ச்சிக்கு தோட்டத்தை வாடகைக்கு விட்ட நில உரிமையாளர் கற்பகமணியையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த 25 பொட்டல கஞ்சா, 3 மதுபாட்டில்கள், போதை ஸ்டாம்புகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கொடைக்கானல் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement