செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்த தேர்விலும் முறைகேடா ? கிளம்பியுள்ள அடுத்த பூதம்

Feb 05, 2020 03:08:48 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வை போலவே, கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகின.

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு என 3 நிலைகளாக நடைபெறும் தேர்வில், உடற்தகுதி தேர்வுக்கான அழைப்புப் பட்டியலிலேயே இடம்பெறாத கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகரம் தொடு என்ற பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் இந்த தேர்வில் நூற்றுக்கணக்கானோர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக புகார் எழுந்தது.

இதே பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்தான் தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிகளின்படி அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்கள், ஒரே வரிசையில் அடுத்தடுத்த எண்களாக இருப்பதுதான் சந்தேகத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த முறைகேடு சர்ச்சையில் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற சார்பு ஆய்வாளர் தேர்வும் இடம்பெற்றுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னதாகவே விஐடி பல்கலைக்கழகத்தில் அவர்கள் தேர்வு எழுதிய அறை, இருக்கை எண்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாணவர்களுக்கு வாட்சப்பில் பகிரப்பட்டதற்கான ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களும் விசாரணைகளும் கைதுகளும் ஏற்படுத்தி வரும் சலசலப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, காவல்துறை தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அடுத்த பூதம் கிளம்பியுள்ளது. முறையாக விசாரணை மேற்கொண்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு....

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement