செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர்

Feb 03, 2020 06:28:10 PM

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரானா அறிகுறிகளுடன், 2 பேர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய் நகரில் உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த 31ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சீனாவில் இருந்து வந்த 14 பேர் இருப்பதாகவும், அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றபோதிலும், அவரவர் வீடுகளில் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் குந்தவை தேவி தெரிவித்தார்.

சீனாவில் இருந்து வந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 10 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரானா அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், சீனாவில் இருந்து திரும்பியவர்கள் என்பதால், வீடுகளிலேயே வைக்கப்பட்டு சுகாதாரத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துமனையிலும் கொரானா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 3 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவவர் ஜெகதீஷ் தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், கேரளாவில் இருந்து  வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்ளை  நிறுத்தி அதில் பயணிப்பவர்களுக்கு மருத்துவ குழுவினர்  விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

தினமும் 10 முதல் 15 முறை, சோப்பு போட்டு சுத்தமாக கைகளை கழுவினாலே இந்த வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement