செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு.. 2 அரசு ஊழியர்கள் சிறையில் அடைப்பு...

Feb 02, 2020 02:33:57 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அரசுப் பணிகளில் உள்ளனர். இந்நிலையில் குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 16 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, விசாரணை செய்தனர். அப்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அளித்த புகாரின் பேரில், 42 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி குரூப்-2 ஏ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் ஆயுதப்படை காவலரான சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சேர்ந்த சித்தாண்டிதான், குரூப்- 2 ஏ தேர்வு முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

குரூப்- 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு தேர்வர்களிடம் 13 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். காரைக்குடிமாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் தனது சகோதரரான வேல்முருகன் என்பவரையும், இந்த தேர்வை எழுத எழுத வைத்து சித்தாண்டி முறைகேடாக தேர்ச்சி பெற வைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சித்தாண்டியிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் உதவியாளராகப் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜெயராணி என்பவரும் பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரிடமும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வேல்முருகனையும், ஜெயராணியையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி குடியிருப்பில் எழும்பூர் குற்றவியல் நீதிபதி ராஜகுமார் முன்பு நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர் இதையடுத்து நீதிபதி இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தாண்டி மீது ஏற்கெனவே குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கும் உள்ளது. இதனால் இரு வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சித்தாண்டி உள்ளிட்ட சில இடைத்தரகர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் சுதாராணி மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணி புரியும் விக்னேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement