செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காவலர் தேர்வில் களவாணிதனம்.. குற்றவாளிகளுக்கே வகுப்பெடுக்கும் வகையில் நூதன மோசடி

Jan 25, 2020 06:14:05 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு போல, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சார்பு ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12, 13ம் தேதிகளில் 969 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்விலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் நிலை காவலர் 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டில் உள்ள சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், 2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 130க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு ஆன்லைனில் நள்ளிரவு நேரத்தில் விண்ணப்பித்து குறிப்பிட்ட மையத்தை தேர்வு செய்ததாகவும், பின்னர் சிலரது உதவியுடன் எழுத்துத் தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வரிசை எண்களை பரிசோதித்து பார்த்தபோது, குறிப்பிட்ட ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களின் பதிவு எண் வரிசையாக உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வும், உடல்தகுதி தேர்வும் முடிந்துவிட்டதால் இன்னும் சில நாள்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. அந்த ஆணைகள் வழங்கப்படும் முன்பு, விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிற தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதிலும் சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதுகுறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Advertisement
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement