செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

Jan 18, 2020 06:39:51 AM

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான காளைகளை, காளையர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். 16 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அலங்காநல்லூரில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. டோக்கன் வழங்கப்பட்ட 700 காளைகளைப் பிடிக்க, பதிவு செய்யப்பட்ட 921 காளையர்கள் அதிகாலையிலேயே தயார்நிலையில் இருந்தனர்.

வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின், வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் இதில் சிக்கினாலும் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

 துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் பல்வேறு கட்சியினரின் காளைகள் களம் கண்டன.
அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும், பிடிக்கவந்தவர்களை மிரட்டி, தெறித்து ஓடவிட்டன.

 வெற்றி பெற்ற வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், அண்டாக்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

16 காளைகள் பிடித்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக முதலமைச்சரின் சார்பில் கார் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரைச் சேர்ந்த அவருக்கு 4 கறவை மாடுகளும் பரிசாக அளிக்கப்பட்டன. அழகர் கோவில் ஆயத்தம்பட்டி கார்த்திக்கிற்கு 2 வது பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடிய மார்நாடு என்பவரின் காளைக்கு முதல் பரிசும், புதுக்கோட்டை அனுராதாவின் காளை ராவணனுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது.

இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயம் அடைந்தனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement