செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மும்பையிலிருந்து 4 துப்பாக்கிகள்...! கைதான பயங்கரவாதியின் பகீர் தகவல்

Jan 13, 2020 06:03:52 PM

பெங்களூருவில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து 4 துப்பாக்கிகளை வாங்கி வந்ததாகவும் அதில் ஒன்றைத்தான் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சனை சுடுவதற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்திலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் நாச வேலைகளில் ஈடுபடவிருந்த காஜா மொய்தீன் மற்றும் அவனுடைய கூட்டாளிகளுக்கு உதவியதாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிபாகான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று நபர்களை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கடந்த 7ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. அந்த தோட்டாக்களும் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் ஒரே ரகம் என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. இந்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைக் கொண்டு காஜாமைதீன், சையது அலி நவாஸ், அப்துல் சமத் ஆகிய 3 நபர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் சிக்கியவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவனை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இஜாஸ் பாஷா என்ற அந்த நபரை பெங்களூரு கலசப்பாளையம் என்ற இடத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மும்பையில் இருந்து 4 துப்பாக்கிகளை வாங்கி வந்ததும் எஸ்.எஸ்.ஐ வில்சனை சுடுவதற்கு அதில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சப்ளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால் எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement