செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ கொலை - கேரளாவில் திட்டம் தீட்டிய கொலையாளிகள்..!

Jan 13, 2020 04:05:35 PM

ன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கேரளாவில் தங்கி திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கொலையாளிகளுக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு குற்றவாளிகள் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியில் நடமாடியதாகக் கூறப்படும் வீடியோ போலீசாரிடம் கிடைத்து உள்ளது.

நெய்யாற்றின்கரையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டி அங்கிருந்து ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு களியக்காவிளை வந்து இந்தக் கொலை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவ்வாறு சந்தேகிக்கும் அந்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கொலைக்கு நேரடியாக உதவியதாக சந்தேகிக்கும் இஞ்சிவிளை பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்பவரை தேடி வரும் போலீசார், அவரது மனைவி ஊரான “விதுர” பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளில் ஒருவனாக சந்தேகிக்கப்படும் தவ்பீக் வங்க தேசத்தில் தீவிரவாத பயிற்சி பெற்றவன் என்று கூறப்படும் நிலையில், கள்ள நோட்டு கும்பலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் கும்பலும் அவனுக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement