செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மறைமுகத் தேர்தலில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள்...

Jan 11, 2020 05:29:56 PM

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான  சம்பவங்களின் தொகுப்பை பார்ப்போம்...

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தூக்க நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது அ.தி.மு.க. உறுப்பினர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட முயன்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வந்த அ.தி.மு.க. உறுப்பினர் வி.கே.நடராஜ் வாக்களிக்காமல் அங்கிருந்த வாக்குச் சீட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட முயன்றார். தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் அவரிடம் இருந்து வாக்குப் பெட்டியை மீட்டு வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பருவாச்சி ஊராட்சி மன்றத்தில் 9 உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. துணைத் தலைவர் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர். அந்த வகையில் மொத்தம் 10 வாக்குகளில், துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சுப்பிரமணி, அய்யணன் ஆகியோர் தலா 5 வாக்குகள் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தியும் அய்யணன் ஆதரவாளர்கள் சிலர் அங்கிருந்த செல்ஃபோன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்யணன் ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்ஃபோன் டவரை விட்டு இறங்கி வந்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத் தலைவராக மனைவியும், துணைத் தலைவராக கணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் 11 இடங்களில் தி.மு.க.வினரும், 5 இடங்களில் அ.தி.மு.க.வினரும் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் சுயேச்சை ஒருவரும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த உமா பிரியா வெற்றி பெற்றார். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. உறுப்பினரான பாலச்சந்தர் வெற்றி பெற்றார். பாலச்சந்தரும், உமாபிரியாவும் கணவன் - மனைவி என்பது குறிப்பிடத் தக்கது.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement