செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Oct 19, 2024 06:56:04 PM

திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பில் அழுகிய முட்டைகளை பயன்படுத்தி கேக்குகள் பிஸ்கட்டுகள் தயாரித்து கடை கடையாக சப்ளை செய்த இரு பேக்கரி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி ஆழ்வார் தோப்பில் உள்ள இரு பேக்கரிகள் தினமும் ஆயிரக்கணக்கில் அழுகிய முட்டைகளை வாங்கிச்செல்வதாக உணவு பொருள் பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குள்ள ஸ்ரீ ஆண்டவர் பேக்கரி மற்றும் ஸ்டார் பேக்கரி தயாரிப்பு கூடத்திற்கு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்காக அங்கு தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் அழுகிய முட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

அழுகிய முட்டையில் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்ய தயாராக இருந்த 215 கிலோ கேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த இரு பேக்கரிகளையும் இழுத்துப்பூட்டி சீல்வைத்தனர். ஸ்டார் பேக்கரி உரிமையாளர் அசாருதீன், ஸ்ரீரீ ஆண்டவர் பேக்கரி உரிமையாளர் கருணாகரன் ஆகியோருக்கு அபராதத்துடன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.

இரண்டு பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கடைகளுக்கு மலிவு விலையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கண்ட கடைகளின் பெயர்களுடன் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement
திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!
அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது
தேனியில் காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு
பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி ஏறி பள்ளி சிறுவன் உயிரிழப்பு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி
வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!
சுமார் 8 லட்சம் முட்டைகளுடன் மீன்பிடி வலையில் சிக்கிய கல்நண்டு

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை


Advertisement