செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Oct 06, 2024 07:03:28 AM

மகாபலிபுரத்துக்கு இரு சக்கரவாகனத்தில் லாங் டிரைவ் சென்ற காதல் ஜோடி மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி தூக்கி வீசப்பட்டு பலியானார். காதலி உயிரிழப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் இளைஞர் மற்றொரு பேருந்துக்குள் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவி சபரீனா. தனியார் கல்லூரியில் , மூன்றாம் ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த சபரீனாவும், உத்திரமேரூர் கமலம்பூண்டி பகுதியை யோகேஸ்வரன் என்ற 20 வயது இளைஞரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில் காதல் ஜோடி சனிக்கிழமை டியோ ஸ்கூட்டரில் மகாபலிபுரம் சென்று விட்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றம் திரும்பியுள்ளனர். மதியம் 12.30 மணி அளவில் பூஞ்சேரி சந்திப்பை அவசரமாக கடக்க முயன்ற போது , சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற புதுச்சேரி அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் மோதியது. இதில் ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த சபரீனா சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் அடைந்த சபரீனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அவரை மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சபரீனாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் . இத்தகவலை கேட்டு யோகேஸ்வரன் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதார். உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அழுது கொண்டே இருந்த யோகேஸ்வரன், பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்று, கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற மற்றொரு அரசு பேருந்தின் முன்பாக பாய்ந்தார். பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கியதில் யோகேஸ்வரனின் உடல் நசுங்கி துண்டானது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.

விபத்தில் உயிரிழந்த சபரீனா , தற்கொலை செய்து கொண்ட யோகேஸ்வரன் ஆகிய இருவரின் உடலை மீட்ட மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் தற்கொலை தொடர்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்து , இரு பேருந்துகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னை நம்பி வந்த சபரீனா உயிரிழந்தால் அவரது பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமலும், இந்த சம்பவம் குறித்து இருவரது பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ ? என்ற பயத்திலும் யோகேஸ்வரன் இந்த சோக முடிவை தேடி கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?
ஈச்சர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்

Advertisement
Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்


Advertisement