செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Sep 27, 2024 07:53:11 AM

சென்னை எழும்பூரில்  மசாஜ் சென்டரில் ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு பயந்து பெண் ஒருவர் ஜன்னல் வழியாக குதித்ததால் கை கால்கள் மற்றும் இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரெய்டு தொடர்பான காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கி வந்த மசாஜ் பார்லர் ஒன்றிற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார் ரெய்டுக்கு சென்றனர்.

அந்த ஸ்பாவில் வேலைபார்த்து வந்த பெண்கள் திடீரென மாயமான நிலையில் வரவேற்பாளராக இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்

சாதாரண உடையில் இருந்த பெண் காவலர்கள் அறைக்குள் சென்று ஆய்வு செய்த போது ஜன்னல் வழியாக இறங்கி சன்சேடு சிலாப் மீது 3 பெண்கள் பதுங்கி இருந்தனர்

அவர்களை பத்திரமாக போலீசார் மேலே ஏறி வரச்செய்தனர்

ஏற்கனவே ஒரு பெண் கீழே விழுந்த நிலையில் கிடப்பதை கண்ட பெண் காவலர் ஓடிச்சென்ரு பார்த்த போது அந்த பெண்ணுக்கு கை, கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினார் . அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அயனாவரத்தை சேர்ந்த 33 வயதான அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்துவருவதாகவும், அந்த பார்லரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தான் பணியில் சேர்ந்தும் தெரியவந்தது. போலீசாரின் விசாரணையால், அவமானம் தாங்காமல் அந்தப்பெண் மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகின்றது. மீதம் உள்ள 4 பெண்களையும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த மசாஜ் ஸ்பாவை நடத்தி வந்த அருள் ,மேனேஜர் மனோஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையால் அவமானம் தாங்காமல் பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக முன் கூட்டியே அந்தப்பெண் குதித்ததற்கு ஆதாரமாக இந்த வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்


Advertisement
திமுக பிரமுகர் மாசி ஓட ஓட விரட்டி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை
மணல்மேட்டில் கருணாநிதி உருவச் சிலையை திறந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்
கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கிய நபரை தாக்கிய சிறுத்தை..
ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.7000 பறிப்பு
ரோட்டின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் விபத்து.. பைக்கில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி உயிரிழப்பு..
தனிநபர் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மண்டபம் இடிக்க உத்தரவு.. அதிகாரிகளை தடுத்து ஊர்மக்கள் போராட்டம்..
சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.30 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புகளை அகற்றிய அறநிலையத்துறை..
வடசென்னை, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படும்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் அக்.6, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு

Advertisement
Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி

Posted Sep 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!


Advertisement