செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Sep 23, 2024 09:49:38 AM

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்ட ரவுடியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக, மனைவியின் கண்ணெதிரே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஸ்ரீரங்கம், அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன். இவர் கடந்த, 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

சந்துரு கொலை வழக்கில் கைதாகி பிணையில் உள்ள ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, இருச்சக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு சுமார் 7.40 மணியளவில், திருவானைக்காவல் அம்பேத்கர் நகர் சுடுகாடு தேங்காய் குடோன் அருகே மற்றொரு இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சுரேஷ் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதினர். இதில், சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.

அடுத்த சில நொடிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த மேலும் 4 பேர் ஆட்டுக்குட்டி சுரேஷை சூழ்ந்து கொண்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தன் கண் முன்னே கணவன் வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டு ராகினி கதறி அழுதார். சுரேஷைக் கொன்றுவிட்டு தப்பியோடிய கொலையாளிகளில் 6 பேர் பிறகு போலீஸாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் திருச்சியில் 14 கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் மட்டும் இதுவரை 10 கொலைகள் நடைபெற்றுள்ளன. கொலைகள் பெரும்பாலும் இரு குழுக்கள் இடையே யார் பெரியவர் என்ற Ego-வினால் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
கடந்த 3 ஆண்டுகளில் திமுக செய்தது என்ன ? - எஸ்.பி. வேலுமணி கேள்வி
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி
ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement