செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Sep 22, 2024 09:38:59 PM

அதிக விபத்துகள் நடைபெறும் தொப்பூர் கணவாய் பகுதியில் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர்களை அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் புரட்டி எடுத்தனர்.

சாலை தடுப்பில் தலைகீழாக தொங்கினாலும் சண்டையை நிறுத்தாத சண்டைக் கோழிகளாக அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மோதிக் கொள்ளும் காட்சி தான் இவை..

தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்தும், பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்தும் இந்தியாவிலேயே அதிக விபத்து நடைபெறும் பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தன.

அதிக அபாயம் கொண்ட பகுதியில் 2 பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. அதில், அரசுப் பேருந்துக்கு வழி விடாததோடு உரசுவது போல ஆம்னி பேருந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வெங்கடாஜலம், ஆம்னி பேருந்தை முந்தி சென்று குறுக்காக நிறுத்தினார். இதனால், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் கீழே இறங்கி வாக்குவாதம் செய்த போது பயணிகளும் கீழே இறங்கினர்.

ஆம்னி பேருந்து ஓட்டுநர் லோகுவுடன் அரசுப் பேருந்து நடத்துநர் மாதேஷ் சாலையில் உருண்டும், சாலை தடுப்பு கம்பியில் தலைகீழாக தொங்கிக் கொண்டும் தாக்குதலில் ஈடுபட, அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடாஜலம் தன் பங்குக்கு ஆம்னி பேருந்தின் மாற்று ஓட்டுநர் ஒருவரை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார்.

பயணிகளில் சிலர் இந்த சண்டையை விலக்கி விட, ஆத்திரக்கார பயணிகளில் சிலர் சண்டையில் இணைந்து ஒரு சில குத்துகளையும் விட்டனர்.

ஒருவழியாக, சண்டை முடிவுக்கு வர இரண்டு பேருந்துகளும் தொப்பூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லப்பட்டன. இதனையடுத்து, இருதரப்பு புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement