செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 2 பேர் கைது

Sep 16, 2024 08:09:33 AM

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை விற்பனை செய்ததாக அருண் என்பவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில், வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்த அருண் என்பவரை போலீசார் கண்காணித்தனர். பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இரண்டு வீடுகள் கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது தெரியவந்தது.

மக்களை நம்பவைக்க சாந்தி அகர்பத்தி என்ற பெயரில் ஊதுபத்தி கம்பெனியும் நடத்திவந்துள்ளார். விசாரணையில், அவர் மீது நான்கு வழக்குகள் இருந்தது தெரிந்து, அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.

வந்தவாசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், ஏஜென்டுகள் மூலம் 40 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்ததும், வாட்ஸ்-அப் மூலம் ரிசல்ட்ஸ் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், 48 லட்சம் ரூபாய் ரொக்கம், 82 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவருடன் சேர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக சையத் இப்ராஹிம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement