செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து சம்பவம்.. அலட்சியமாக செயல்பட்டதாக விடுதியின் உரிமையாளர் கைது..!

Sep 12, 2024 03:28:57 PM

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளர் இன்பா கைது செய்யப்பட்டார்.

அதிகாலையில்  அறையில் இருந்த குளிர்சாதனபெட்டி வெடித்து அதில் இருந்த சிலிண்டர் மூலம் வெளியேறிய நச்சுப்புகையால் 5 பேர் மயங்கிய நிலையில், பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்.  விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விடுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவசரகாலத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்துள்ளனர். இந்த கட்டடம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டு, 7 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதியே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உபயோகத்தில் இல்லாத குளிர்சாதனப் பெட்டி ப்ளக் பாயின்டில் பொருத்தப்பட்டு சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்ததாகவும், ஒயர் எரியத் தொடங்கியவுடன் பெரும்பாலானோர் வெளியே வந்ததாகவும் விடுதியில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

 

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement