செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையில் பறந்த கற்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடி தவித்து நின்ற வாகன ஓட்டிகள்..!

Sep 12, 2024 09:33:57 AM

கோவை சுந்தராபுரத்தில் இரு ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் எதிரெதிரே நின்று கல் எறிந்து சண்டை போட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்

கோவை சுந்தராபுரம், காமராஜர் நகர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று மாலை, ஆட்டோ ஓட்டுனர்கள் 2 பேர் கற்களை எடுத்து வீசி நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!

தான் அணிந்திருந்த காவி வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு, கையில் கத்தியை எடுத்து வந்து நடுரோட்டில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை விரட்டினார்

இருவரும் சாலையில் நின்று கையில் கற்களை எடுத்து மாறி மாறி மிரட்டினர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீதும், வாகனங்கள் மீதும் கற்கள் பட்டதால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் அப்படியே நின்றன.

இருவரையும் தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ ஒருவர்கூட முயற்சிக்காத நிலையில், போலீசார் வரவும் தாமதமானதால் இருவரும் கையில் கத்தியை வைத்துக் கொண்டு கற்களை வீசிக் கொண்டே இருந்தனர்.

ஒருகட்டத்தில், கல்வீச்சில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு ஒன்வேயில் புகுந்து தப்பினார்.

இறுதியில் வந்த சுந்தராபுரம் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆட்டோ டிரைவர்களான உதயசூரியன், கதிர் ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாகவும், குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் தெரியவந்தது. காயம் அடைந்த இருவர் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement