செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நள்ளிரவு 12 மணிக்கு திகில் புளியமரத்தில் மோதிய பைக் பலியான நண்பனுக்காக உயிர்தியாகம்..! மின்கம்பத்தில் ஏற வைத்தது யார் ?

Sep 12, 2024 09:33:30 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் புளியமரத்தில் மோதி உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் மின் கம்பத்தில் ஏறி இளைஞர் உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தேனிமாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், இவருக்கு நிஜானந்த், நிவேதன் என இரு மகன்கள் உண்டு. சம்பத்தன்று கோம்பைக்கு நண்பரும் உறவினருமான ஆனந்தராஜுடன் இரு பைக்குகளில் நிஜானந்த், நிவேதன் ஆகியோர் சென்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் 3 பேரும் இரு பைக்குகளில் வீடு திரும்பிகொண்டிருந்தனர். கருகோடை என்ற கிராமத்தில் அதிவேகமாக வந்த போது நிஜானந்த் ஓட்டி வந்த பைக் சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. அலறல் சத்தம் கேட்டு முன்னால் பைக்கை ஓட்டிச்சென்ற ஆனந்தராஜும், நிவேதனும் திருப்பி வந்தனர். இருட்டுக்குள் பலத்த ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிஜானந்தை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

நிஜானந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததால், நண்பனை காப்பாற்ற இயலவிலையே என்று அழுதபடியே ஆனந்தராஜ் தனியாக சென்று அமர்ந்திருந்தார். இந்த நிலையில் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்த போது ஆனந்தராஜையும் அவரது பைக்கையும் காணவில்லை. பின்னர் தேடிப்பார்த்த போது விபத்து நடந்த புளியமரத்தடியில் கருகிய நிலையில் ஆனந்தராஜ் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்ற ஆனந்தராஜ், புளியமரத்தடியில் நிஜானந்தின் காலணிகள் சிதறி கிடந்த இடத்தின் அருகே தனது இரு காலணியையும் கழட்டிபோட்டு விட்டு, அதன் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி உயர் அழுத்த மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மின்வாரிய தற்காலிக ஊழியரான ஆனந்தராஜ் , நிஜானதின் உறவினராக இருந்தாலும் சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக கூறப்படுகின்றது.

தனது கண்ணுக்கு முன்பு உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் அவர் இந்த சோக முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement