செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண் டி.ஐ.ஜியின் வீட்டில் வேலைக்கு ஆயுள் சிறைக்கைதி இருட்டு அறையில் சித்ரவதை..! விசாரணை படத்தை மிஞ்சும் கொடுமை

Sep 11, 2024 12:11:23 PM

சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச்சென்ற போது, வீட்டில் இருந்து நகை பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி 14 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக டி.ஐ.ஜி ராஜலெட்சுமி, உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார், வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆயுள் கைதியான தனது மகனை சட்ட விரோதமாக சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜெலட்சுமியின் வீட்டு வேலைக்கு பணியமர்த்தியதாகவும், அங்கு நகைப்பணம் காணாமல் போன நிலையில் அதனை தனது மகன் எடுத்ததாக கூறி தனியாக இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறி இருந்தார்.இதையடுத்து இந்த புகார் குறித்து வேலூர் சிறைத்துறை நடுவர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீத்த்துறை நடுவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் சிறை அதிகாரிகளின் அத்துமீறல் குறித்து விரிவான விசாரணையை முன்னெடுத்தனர்.

முன்னதாக பாதுகாப்பு கருதி வேலூரில் இருந்த சிவக்குமார் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார், அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். தனக்கு நேர்ந்த கொடுமைகள், சித்ரவதைகள் குறித்து சிவக்குமார் விரிவான வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில்
வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டிஐஜி ராஜலட்சுமியின் PSO ராஜு, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி சிறை வார்டன்களான சுரேஷ், சேது ஆகிய உட்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சிவக்குமாருக்கு இந்த கொடுமை நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி வீட்டில் ஆயுள் கைதி சிவக்குமார் பணியாமர்த்தப்பட்ட நிலையில் அவரது வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருடு போனதாகவும், அதனை சிவக்குமார் திருடி இருப்பார் என்று டி.ஐ.ஜி ராஜலெட்சுமி கூறியதன் அடிப்படையில், சிறைத்துறை கூடுதல் எஸ்பி, ஜெயிலர் மற்றும் சிறைத்துறையினர் கொடுமை செய்ததாக கூறப்பட்டுளது.

சிறையில் உள்ள எந்த கைதியும் வெளியில் பணிக்காக பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி டி.ஐ.ஜி வீட்டில் அடிமை போல் கைதிகள் பணிக்கு அமர்த்தப்பட்டது தெரியவந்துள்ளதாகவும், சிவக்குமார் மட்டுமல்லாது மற்ற கைதிகளும் பல வருடங்களாக விதிகளை மீறி உயரதிகாரிகள் வீட்டில் பணிக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையிலும் , டி.ஐ.ஜி பங்களாவிலும் ஆய்வு செய்ததில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாகவும் அது தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 84 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதும் 14 நாட்கள் மூடப்பட்ட இருட்டு அறையில் அடைக்கப்பட்டு மிகக்கொடுமையாக தாக்கப்பட்டுள்ளதும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement