செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

400 லிட்டர் டீசல் போச்சாம்... முழிச்சு பார்த்தா காணோம்... சாலையில் தவித்த லாரி ஓட்டுனர்...! திருச்சி போலீசுக்கு சவால்..!

Sep 09, 2024 11:16:36 AM

தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ஆசிட் ஏற்றிசென்ற லாரி ஓட்டுனர் கண் அயர்ந்த நேரம் பார்த்து, லாரியில் இருந்த 400 லிட்டர் டீசலை மர்ம ஆசாமிகள் களவாடிச் சென்றதால் லாரியை எடுத்துச்செல்ல இயலாமல் 2 நாட்களாக லாரி ஓட்டுனர் தவித்து வருகின்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகில் உள்ள டி.சி.டபிள்யு தொழிற்சாலையில் இருந்து கடந்த 6 ஆம் தேதி ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கடலூர் நோக்கிச்சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவு 12 மணி அளவில் லாரி திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வந்த போது ஓட்டுனருக்கு தூக்கம் வந்ததால், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் லாரியை நிறுத்திவிட்டு கண் அயர்ந்து தூங்கி உள்ளார்.

2 மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த ஓட்டுனர், லாரியை சுற்றி பார்த்த போது டீசல் டேங்க் பூட்டு உடைக்கப்பட்டு மொத்த டீசலையும் யாரோ மர்ம ஆசாமிகள் குழாய் போட்டு உறிஞ்சி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது போலீசார் புகாரை வாங்க மறுத்து அவரை அலைக் கழித்ததால், லாரியை எடுத்துச்செல்ல இயலாமல் சாலையிலேயே தவிப்பதாக லாரி ஓட்டுனர் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுனர் இ.வாகன் சேவை மையத்தை தொடர்பு கொண்டதை அடுத்து இந்த டீசல் திருட்டு குறித்தும் போலீசார் புகாரை வாங்க மறுத்தது குறித்தும் ஆன் லைன் மூலம் திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு புகார் அளித்துள்ளனர்.

அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் டீசலை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருப்பதாகவும், அதனை வைத்து டீசல் திருடர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், தங்கள் லிமிட்டில் எப்படி லாரியை நிறுத்தி தூங்கலாம் என்று போலீசார் மிரட்டி விரட்டுவதாகவும் லாரி ஓட்டுனர் வேதனை தெரிவித்தார்.

இந்த பகுதியில் ஏற்கனவே சில லாரிகளில் டீசல் திருட்டு நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement