செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

45 வயதுக்கு மேல் போராடி பெற்ற குழந்தை கார் விபத்தில் தாயுடன் பலியான சோகம்!

Sep 09, 2024 06:54:24 AM

சென்னையை அடுத்த செங்குன்றம் அலமாதி அருகே சாலை நடுவே உள்ள டிவைடரில் கார் மோதி, தாயும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். ஏற்கனவே சாலை விபத்தில் தங்களது 23 வயது மகனை பலி கொடுத்து, 45 வயதுக்கு மேல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தம்பதியின் வாழ்வில் ஐந்தே ஆண்டுகளில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஜெயவேல் - உஷாராணி தம்பதி. இவர்களது ஒரே மகன் ஹரிகிருஷ்ணன் மருத்துவம் படித்து வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் தனது 23வது வயதில் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனைப் பறிகொடுத்து தவித்த தம்பதி, பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கி, பல லட்சம் ரூபாய் செலவழித்து சிகிச்சை பெற்றதில் அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் பிறந்தபோது, ஜெயவேலுவுக்கு வயது 48. உஷாராணிக்கு வயது 44.

சாய் மோனிஷா, சாய் மோகித் எனப் பெயரிட்டு குழந்தைகள் இருவரையும் வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள உஷாராணியின் தாய் வீட்டுக்கு 4 பேரும் வாடகைக் கார் ஒன்றில் சென்றுள்ளனர். அதிவேகமாகச் சென்ற கார் அலமாதி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள டிவைடரில் மோதியது. காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், உஷாராணி, சாய் மோனிஷா மற்றும் ஓட்டுநர் என 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஜெயவேலுவும் சாய் மோகித்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டிச் சென்றதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement