செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எங்கள பார்த்தால் அப்படியா தெரியுது ? சார் பதிவாளரை தொடர் கேள்விகளால் பதறவிட்டு.. தெறிக்கவிட்ட விவசாயிகள்..!

Sep 04, 2024 07:50:30 AM

கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்

அன்னூரில் விவசாய நிலங்களை விற்றாலோ, வாங்கினாலோ பத்திரபதிவு செய்ய மறுத்துவந்த சார்பதிவாளருக்கு எதிராக விவசாயிகளின் எச்சரிக்கை குரல் தான் இது..!

கோவை மாவட்டம் அன்னூரில் 3800 ஏக்கர் பரப்பளவில் அக்கரை செங்கப்பள்ளி ,குப்பனூர், வடக்கலூர்,பொகலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள இலுப்பநத்தம் , பள்ளேபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது . இதற்கு விவசாய சங்கங்களும் , பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் சிப்காட் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அந்த ஊராட்சி பகுதிகளில் சிப்காட் அமைக்க திட்டமிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை குறிப்பிட்ட தனியார் ஒருவர் அதிக அளவு வாங்கிக்குவித்த நிலையில், விவசாயிகள் தங்களுக்குள் நிலங்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மீண்டும் வெகுண்டு எழுந்த கிராம மக்கள் சம்பவத்தன்று அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அன்னூர் சார் பதிவாளர் செல்வ பாலமுருகன், பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்றும் விவசாயிகளிடம் யாரோ தவறாக தெரிவித்துள்ளனர் எனவும் கூறிவிட்டு அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றதால் கோபமடைந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மக்களை நீங்கள் மதிக்கவில்லை என்றால் உங்களுக்கு அரசு பணியே இருக்காது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்ததால் செய்வதறியாமல் திகைத்து நின்றார் அன்னூர் சார் பதிவாளர்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement