செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உரிமையாளர் வீட்டையே லீசுக்கு விட்ட பெண்.. ஃபேஸ்புக்கில் அழுகாச்சி நாடகம்..!

Sep 03, 2024 10:20:41 PM

சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டையே 6 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்ட பெண்ணின் தில்லாலங்கடி வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தன்னையும் தனது குழந்தைகளையும் வீட்டு உரிமையாளர் பழனி தனது வழக்கறிஞர்களோடு சேர்ந்து தாக்கி விரட்டிவிட்டார் என ஃபேஸ்புக் நேரலையில் அழுது புலம்பி, பலரது பரிதாபங்களை சம்பாதித்த லோகநாயகி இவர்தான்.

இந்த வீடியோவில் சிலர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்யவே, உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், வீடியோ பதிவு செய்த இடம், சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகர் இந்திரா நகர் 4-வது தெரு என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் லோகநாயகி என்பதும் அவர் கூறியதுபோல், அவரது குழந்தையை யாரும் தாக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

பழனி என்பவரது வீட்டில் தான் லோகநாயகி தனது 2 மகள்களுடன் வாடகைக்கு இருந்து வருகிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரைப் பிரிந்த லோகநாயகி, பழனியுடன் ஏற்பட்ட தவறான தொடர்பால், அவர் வீட்டிலேயே வாடகைக்குக் குடிவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்று, பழனி தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார். 6 மாதங்கள் கழித்து வந்து பார்த்தபோது, அவரது வீட்டை லோகநாயகி 6 லட்ச ரூபாய்க்கு வேறொருவருக்கு குத்தகைக்கு விட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திமடைந்த பழனி, உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லோகநாயகி, தனது வளர்ப்பு நாயை ஏவிவிட்டு, பழனியை கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், விருகம்பாக்கம் போலீசில் புகாரளித்துள்ளார். அதுகுறித்த விசாரணை தொடங்குவதற்குள்தான், லோகநாயகி, ஃபேஸ்புக்கில் இந்த அழுகாச்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது, 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement