செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பருப்பு வடை தெரியும் அது என்ன எலி வடை..?.. இழுத்து பூட்டப்பட்ட கடை..! - இப்படில்லாம் வியாபாரம் செய்தால் எப்படி..?

Aug 31, 2024 06:18:40 AM

குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

 

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே திருச்சி கரூர் நெடுஞ்சாலை வைகைநல்லூர் அக்ரஹாரம் பிரிவு சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காளிதாசன் என்பவர், பாபு என்ற பெயரில் டீ மற்றும் பலகார கடை நடத்தி வந்தார். இங்கு கார்த்தி என்ற எலக்ட்ரீசியன் காலை 12 மணி அளவில் ஒரு போண்டா, ஒரு பருப்பு வடை வாங்கி சாப்பிட்டு உள்ளார் . அதில் பருப்பு வடை பாதி சாப்பிட்டு விட்டு பார்க்கையில் உள்ளே சுண்டெலி ஒன்று செத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது அது ஒன்றும் செய்யாது சிறிய எலிதான் தூக்கி போட்டு விடுங்கள் என்று கூலாக கூறியுள்ளார். எலி விழுந்த மாவில் தாயாரிக்கப்பட்ட வடைகளை தூக்கிப்போட சொல்லியும் கேட்காமல், அலட்சியத்துடன் பொதுமக்களுக்கு பலகாரங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். குளித்தலை பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் இல்லாததால், நகராட்சி நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு அலுவலர் வந்தவுடன் கடை மற்றும் தின்பண்டங்கள் சோதனைக்காக எடுத்துச்சென்ற தோடு, கடையையும் இழுத்துப்பூட்டி சீல்வைத்தனர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்

பாதிக்கப்பட்ட கார்த்திக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement