செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அம்மனக்கட்டையாக நின்று போலீசாரை மிரட்டிய திமுக பிரமுகர் ராஜதந்திரங்கள் வீணான தருணம்.. கையில் எடுத்த கடைசி ஆயுதம் சாதி..!

Aug 31, 2024 08:00:32 AM

 நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய வந்த ஏ.எஸ்.பியை மறித்து திமுக பிரமுகரின் மனைவி சாதியை சொல்லி திட்டியதாக மிரட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அடுத்த வெங்கட்ராயபுரம் சடையநேரி குளத்தில் கடந்த 17-ம் தேதி மணல் திருட்டில் ஈடுபட்டதாக திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன் என்பவர் மீது கிராம நிர்வாக அலுவலர் மகா ஹரி சந்திரன் விஜய நாராயணம் போலீசில் புகார் அளித்தார். மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி, இரு சக்கரவாகனங்கள் கைப்பற்றப்பட்டது. சாத்தான்குளத்தை சேர்ந்த கங்கை ஆதித்தனை தேடிவந்தனர்.

நீதிமன்றத்தில் அவருக்கு முன் ஜாமின் கிடைக்காத நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவரது வீட்டை போலீசார் ஏ.எஸ்.பி பிரசன்னகுமார் தலைமையில் சுற்றி வளைத்தனர். கங்கை ஆதித்தன் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு திறக்க மறுத்து அடம் பிடித்தார்.

போலீசார் கதைவை திறக்க முயன்ற போது பள்ளிச்சீறுடை அணிந்த தனது மகளை இடையில் தள்ளி கங்கை ஆதித்தனின் மனைவி போலீசாருக்கு இடையூறு செய்தார். 

வடிவேலு காமெடி காட்சியில் வருவது போல, உள்ளே வராதீங்க.. அறைக்குள் ஆடைகளை களைந்து போட்டு, நிர்வாணமாக நிற்பதாக கூறி கங்கை ஆதித்தன் மிரட்டிய நிலையில், போலீசார் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டினர். கங்கை ஆதித்தனின் மனைவியோ , ஏ.ஏஸ்.பியை மறித்து கடும் வாக்குவாதம் செய்தார். 

மணல் திருடுவது தப்பு என்று கூறிய ஏ.எஸ்.பி , சிறுவர்களை குறுக்கே நிற்க வைத்து அவர்களின் மனதையும் கெடுக்க வேண்டாம் என்று பொறுமையாக அறிவுரை கூறினார்.

கடைசி ஆயுதமாக , போலீசார் தன்னை சாதியை சொல்லித்திட்டியதாக கூறி கங்கை ஆத்தித்தனின் மனைவி டூட்டை மாற்ற , “பொய் சொல்லாதீங்கம்மா நீங்க என்ன சாதின்னே எனக்கு தெரியாது” என்று கூறிய ஏ.எஸ்.பி தனது காரில் ஏறினார்.

அதற்குள்ளாக வீட்டிற்குள் அம்மனக்கட்டையாக நின்று அலப்பறை செய்து கொண்டிருந்த கங்கை ஆதித்தனை கைலி அணியச்செய்து போலீசார் கைது செய்து வெளியே அழைத்து வந்தனர்.

அருகில் இருந்த கங்கை ஆதித்தனின் ஆதரவாளரோ , அண்ணனை வித் அவுட்டாக போலீசார் அழைத்து செல்வதாக தவறான தகவலை தெரிவித்தார்.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement