செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருச்சி என்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் விடிய விடிய நடத்திய போராட்டம் வாபஸ்

Aug 30, 2024 12:48:04 PM

திருச்சி என்ஐடி கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய விடுதி வார்டன் உள்ளிட்ட 3 பேரை கண்டித்து மாணவ, மாணவிகள், விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.

போலீசார் முன்னிலையில் வார்டன் உள்ளிட்ட மூவரும் மன்னிப்பு கோரியதை அடுத்து மாணாக்கர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருச்சி துவாக்குடி என்ஐடி கல்லூரியின் ஓபெல் விடுதிக்கு நேற்று பிற்பகலில் வைஃபை இணைப்பு கொடுக்க வந்து மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்பட்ட புகாரில், ஒப்பந்த ஊழியரான கதிரேசன் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் விடுதி வார்டனாக உள்ள உதவி பேராசிரியை ஷமீதா பேகம், ஊழியர்கள் பேபி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மூவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்றிரவு 11.30 மணி முதல் காலை 9.45 மணி வரையில் மாணாக்கர்கள் போராட்டம் நடத்தினர்.தொடங்கி வைக்கிறார்

இந்நிலையில், மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய திருச்சி எஸ்.பி. வருண்குமார், விடுதி வார்டன் குறித்து மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பெண் போலீசார் மூலம் மாணவிகளிடம் குறைகள் கேட்கப்பட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருண்குமார் உறுதி அளித்தார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement