செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பேருந்து சாவியை பறித்துக் கொண்டு ஓடிய போதையன் இடையில் நிற்காதா.. இப்ப நின்னுச்சா..?! விரட்டிப் பிடித்த பரபரப்பு காட்சிகள்

Aug 30, 2024 12:00:27 PM

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்ற தனியார் பேருந்து இடையில் நிற்காது என்றதால் ஆத்திரம் அடைந்த வல்லநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பேருந்தின் சாவியை பறித்துக் கொண்டு ஓடியதால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டுச்சென்ற லயன் என்ற தனியார் பேருந்தின் சாவியை போதை பயணி ஒருவர் பறித்துச் சென்றதால் என்ன செய்வதென்று தெரியாமல் பயணிகள் பேருந்துக்குள் விழிக்க.. சாவியுடன் ஓடியவரை பிடிக்க இயலாமல் ஓட்டுனர் சாலையில் தவித்து நிற்கும் காட்சிகள் தான் இவை..!

பேருந்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் நிறுத்தப்பட்டதால், பயணிகளின் தவிப்பு அறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.

ஒருவர் சாவியை பறித்துக் கொண்டு சென்று விட்டார் என்று அவர் சென்ற திசையை நோக்கி கைகாட்டிய பேருந்து ஓட்டுனர்,இரவல் பைக் ஒன்றை வாங்கி அதில் காவலரை ஏற்றிக் கொண்டு அந்த ஆசாமியை விரட்டிச் சென்றார்

ஓடினால் அடையாளம் கண்டு கொள்வார்கள் என நினைத்து, தெருவில் நிதானமாக நடந்து சென்ற அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்த போலீசார், “பேருந்து சாவியை ஏன் எடுத்தாய்” என்றதும், ‘எங்க ஊரு வல்லநாட்டில் பஸ் நிற்காதுன்னு சொல்ராங்க’... ‘இந்த பஸ்ஸுக்கு பாயிண்டு டூ பாயிண்டு உரிமம் இருக்கா..? என்று பாயிண்ட் பிடித்து பேச ஆரம்பித்தார் அந்த ஆசாமி

பாயிண்டை பிடித்தவரின் சட்டையை மடக்கிப்பிடித்து போலீசார் இழுத்துச்சென்ற நிலையில், இடையில் நிற்காது என்றதால் பேருந்துக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஓட்டுனர் போலீஸ் நிலையம் முன்பு பேருந்தை நிறுத்தியதால் , சாவியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் தெரிவித்த அந்த போதை ஆசாமி, ‘நான் குடிச்சிருக்கேன் என்று நினைக்காதீங்க.. நாளைக்கு குடிக்காம வந்தாலும் இதை செய்வேன்’ என்றார்

‘அப்படியே வாங்க உள்ள போய் பேசலாம்’ என்று போலீசார் அந்த ஆசாமியை காவல் நிலையத்திற்குள் அழைத்துச்சென்றனர். இதன் காரணமாக இடை நில்லா பேருந்து அரைமணி நேரத்தும் மேலாக நடுவழியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


Advertisement
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement