செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அலைபாய்ந்த ஆம்னி பேருந்து அதிர்ச்சியில் எழுந்த பயணிகள்.. போதை ஓட்டுனருக்கு லெப்ட் ரைட்..! ஓட்டுனர் உரிமம் அம்பேல்..!

Aug 27, 2024 09:02:11 AM

குளிர்பான பாட்டிலுக்குள் மதுவை கலந்து குடித்துக் கொண்டே பொள்ளாச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தை இயக்கிச்சென்ற ஓட்டுனரை பல்லடத்தில் வைத்து பேருந்தில் பயணித்தவர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தாறுமாறாக சென்ற பேருந்தால் உயிரை கையில் பிடித்தவர்கள் எடுத்த அதிரடி முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அலைபாய்ந்தபடி தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்கள் பேருந்துக்கு என்ன ஆச்சு என்று பார்த்த போது ஓட்டுனர் போதையில் நிலை தடுமாறிய நிலையில் பேருந்தை இயக்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்த வைத்தனர் , ஓட்டுனரின் சிக்சாக் டிரைவிங்கை கண்டு மிரண்டு போன வாகன ஓட்டிகளும் ஆம்னி பேருந்தை மடக்கினர். பேருந்து ஓட்டுனரை சிறைபிடித்து அவரை சோதனை மேற்கொண்டதில் ஜூஸ் பாட்டிலில் மதுவை கலந்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வருவதற்குள்ளாக ஓட்டுனரை லெப்ட் ரைட் வாங்கி அப்படியே தரையில் அமரவைத்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் விஜிகுமார், ஓட்டுநர் வெங்கடாஜலபதியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர்.

அவர் அளவுக்கு மீறிய போதையில் இருப்பது தெரியவந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த பேருந்து ஓட்டுனரை வீட்டுக்கு அனுப்பிய நிலையில் ஒருமணி நேரம் தாமதத்துக்கு பின்னர் அந்த பேருந்து மாற்று ஓட்டுனர் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உஷாராக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாகவே பேருந்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement