செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

7 வயது சிறுமியின் தொண்டைக்குள் அரசு மருத்துவர்கள் அனுப்பிய காமிரா..! விழுங்கிய துட்ட தட்டித்தூக்கி வந்தது..! குழந்தைகளை எச்சரிக்கையாக பார்த்துக்கங்க..!

Aug 24, 2024 06:12:00 AM

திருச்சியில் 7 வயதுச் சிறுமி 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய நிலையில், தொண்டைக்குள் காமிராவுடன் கூடிய கருவியை செலுத்தி நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்

திருச்சி மாவட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசுவின் 7 வயது மகள் கிருத்திகா. அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் கிருத்திகா,
சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தனது தந்தையிடம்
தின்பண்டம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

திருநாவுக்கரசு 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து கடையில் தின்பண்டம் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். கடைக்கு சென்ற சிறுமி 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விளையாடியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாணயத்தை சிறுமி விழுங்கியதாக கூரப்படுகின்றது . மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது தந்தையிடம் ஓடிவந்து நாணயத்தை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார் சிறுமி கிருத்திகா.

இதனால் பதறி துடித்த திருநாவுக்கரசு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாணயத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் தொண்டைக்குள் சிக்கிய நாணயம் மேலும் கீழே உள்ளே சென்று விட்டதாக கூறப்படுகின்றது

சிறுமியை காப்பாற்ற உடனடியாக முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமி கிருத்திகா அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உணவுக்குழாய் பகுதியில் நாணயம் செங்குத்தாக சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

சிறுமி மூச்சுத் திணறலால் அவதியுற்றதால், சர்ஜிகல் கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி துறைத் தலைவர் கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜசேகர், சங்கர் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு சிறுமியின் உணவு குழாயில் அடைபட்டு நின்ற நாணயத்தை நவீன முறையில் வெளியே எடுக்க திட்டமிட்டனர். அதன்படி சிறுமியின் வாய் வழியாக தொண்டைக்குள் மருத்துவர்கள் அனுப்பிய நுண்ணிய காமிராவுடன் கூடிய கருவி, உணவுக்குழாயில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை கவ்விப்பிடித்து வெளியே கொண்டு வந்தது.

அந்த நாணயத்தை வெளியே எடுத்த நிலையில் சிறுமி தற்போது நலமுடன் உள்ளார். பெற்றோர் சிறுவர் சிறுமிகளிடம் நாணயத்தை கொடுக்கும் போது வாயில் போட்டு விளையாடக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement