செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மழைக்கு ஒதுங்கச் சென்று பள்ளத்தில் கைக்குழந்தையோடு அடுத்தடுத்து விழுந்த 3 பெண்கள் அபாயமாகும் சாலையோர பள்ளங்கள்

Aug 22, 2024 07:16:05 AM

சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரப் பகுதியில் மழைநீர் வடிந்துச் செல்லும் வகையில் வாறுகால் அமைக்கும் பணியோடு, சாலை விரிவாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் நெடுஞ்சாலை துறையினர். வாறுகாலுக்கும், சாலைக்கும் இடைப்பட்ட நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியும் கடந்த சில மாதங்களாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்காகவே நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

மதுரை பேருந்து நிறுத்தம் என்ற இடத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்பு நடைபாதை பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்காக கடந்த ஞாயிறன்று சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

நகரில் மாலை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றன.

அப்போது, பெய்துக் கொண்டிருந்த மழைக்கு ஒதுங்குவதற்காக 3 பெண்கள் தங்களது ஒரு கையில் குழந்தையையும் மற்றொரு கையில் குடையையும் பிடித்துக் கொண்டு நகராட்சி வணிக வளாகம் நோக்கிச் சென்றனர். சாலையை அடுத்தும் தண்ணீர் தேங்கி நின்றதால் பள்ளத்தை தரையென நினைத்து கால் வைத்த பெண் ஒருவர் தனது கைக்குழந்தையோடு தண்ணீருக்குள் விழுந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற 2 பெண்களும் குழந்தைகளோடு அடுத்தடுத்து விழுந்து தத்ததளித்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரில் விழுந்த குழந்தைகள் மற்றும் பெண்களை மீட்டனர்.

மாலையில், குழந்தைகளோடு 3 பெண்கள் விழுந்த நிலையில், இரவு நேரத்தில் ஆண் ஒருவரும் அந்த பள்ளத்தில் கால் வைத்து தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.

விபத்து தொடர்பான சி.சி.டி.வி பதிவு வெளியான நிலையில், பள்ளங்களை கான்கிரீட் கலவை போட்டு மூடும் பணியில் ஈடுபட்டனர் நெடுஞ்சாலைத் துறையினர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement