செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆன்லைன் பங்குச்சந்தையில் ரூ.1.05 கோடி முதலீடு செய்த விவகாரம்... 2 நபரை கைது செய்து போலீசார் விசாரணை

Aug 20, 2024 03:56:44 PM

பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் ஆன்லைன் பங்குச்சந்தை ஏஜென்சி நடத்தி வரும் சசிகுமாரிடம், அதிக லாபம் கிடைக்கும் ஆசையில் அவரது நண்பர்கள் திருமால், ராஜேந்திரன், முனுசாமி ஆகியோர் ஒரு கோடியே 5 லட்ச ரூபாயினை கடந்த 2021 ஆம் ஆண்டு அளித்துள்ளனர். 

இதனை பிட்காயின் டிஜிட்டல் வர்த்தகத்தில் சசிக்குமார் முதலீடு செய்து, நண்பர்கள் அளித்த முழுதொகையும் இழந்து நஷ்டம் அடைந்துள்ளார். நண்பர்கள் அளித்த பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்த நிலையில், பங்குச்சந்தை தொழில் நிமித்தமாக ஒசூர் வந்த சசிகுமார், அவரது தாய் ஸ்ரீதேவியை  நண்பர்கள் மூவரும் காரில் பெங்களூருவிற்கு கடத்தி சென்று, தங்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

இதனிடையே நீண்ட நேரம் ஆகியும் மனைவி ஸ்ரீதேவியும், மகன் சசிகுமாரும் வீடு திரும்பதாதல், தந்தை மாதப்பன் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தாய்-மகனின் செல்போன் டவர் சிக்னல் மூலம், பெங்களூரு சில்க் போர்டு பகுதியில் அவர்கள் அடைத்து வைத்திருந்ததை கண்டறிந்து இருவரையும் மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட நண்பர்கள் திருமால், ராஜேந்திரனை கைது செய்த போலீசார், தலைமறைவான முனுசாமியை தேடி வருகின்றனர். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement