செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மலையில் காளான் தேடிய எம்.பி.ஏ பட்டதாரிகள்.. பைனலாக காத்திருந்த டுவிஸ்ட்..! கொடைக்கானலில் இதை செய்யாதீங்க..!

Aug 18, 2024 12:26:57 PM

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் இன்ஸ்டாகிராமை பார்த்து மலையில் மேஜிக் மஸ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக்காளானை சேகரித்த எம்.பி.ஏ பட்டதாரிகள் உள்ளிட்ட 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கொடைக்கானலுக்கு போயி... போதைக்காளானில் இப்படி தேனை ஊற்றி பிசைந்து சாப்பிட்டா.... கவலையே படாதீங்க... உங்களை போலீஸ் வந்து பிடிச்சுட்டு போயிடும் என்று தரமாக எச்சரித்துள்ளார் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுமதி..!

சுற்றுலாப் பிரியர்களின் விருப்பத் தேர்வான கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சிலர் வெளியிடும் மேஜிக் மஸ்ரூம் பதிவை பார்த்து வெளிமாநில இளசுகள் பலர் மலைகிராமங்களில் உள்ள தனியார் டெண்ட்கள் மற்றும் தங்குவிடுதிகளை தேடிச்செல்வது வழக்கமாக மாறி வருகின்றது.

இதையடுத்து மன்னவனூர், ஏரிச்சாலை,பாம்பார் புரம், பேரிபால்ஸ் மேல்மலை கிராமங்களில் உள்ள டென்ட் கூடாரம், டூம்ஹவுஸ், ஏ பிரேம் உள்ளிட்ட விடுதிகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர்.

போதைக்காளானை விற்றதாக மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, கல்லறை மேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், பாம்பார்புரம், பேரிபால்ஸ் பகுதியைச் சேர்ந்த மணி ஆகியோரை கைது செய்தனர். கொடைக்கானல் பெர்ன்ஹில் பகுதியில் னேரடியாக களமிறங்கி போதை காளான்களை தேடிச்சென்று பறித்து கொண்டிருந்த மதுரை மேலூரை சேர்ந்த சூர்யா, ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகிய எம்.பி.ஏ பட்டதாரிகளையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சோதனையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சிக்கினர். 500 கிராமுக்கும் அதிகமான போதைக்காளான்களையும் கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போதைக்காளான் குறித்து விளம்பரப்படுத்தும் நபர்கள் குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுமதி எச்சரித்துள்ளார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement