செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு? மருத்துவமனைக்கு "செக்" வைத்த சுகாதாரத்துறை!

Aug 16, 2024 06:14:56 PM

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் கருக்கலைப்பின்போது கலைமணி என்ற பெண் உயிரிழந்ததாகக புகார் எழுந்ததை அடுத்து, அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் அங்கீகாரம், குடும்பக் கட்டுப்பாட்டு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரிமளேஸ்வரன் - கலைமணி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கலைமணி மீண்டும் கருவுற்றிருக்கிறார். பரிமளேஸ்வரன் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றதாகக் கூறப்படும் நிலையில், கருவில் உள்ளது மீண்டும் பெண்ணாக இருந்துவிடுமோ என பயந்த கலைமணி, பொன்னமராவதியுள்ள துர்கா மருத்துவமனையை அணுகி குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்துள்ளார். அதில் பெண் குழந்தை என்பது தெரியவரவே, அங்கேயே கருக்கலைப்பு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. கருக்கலைப்பு சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக கலைமணி உயிரிழந்தார்.

கலைமணி தங்களுக்குத் தெரியாமல் தனது தோழியுடன் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் மருத்துவர்கள் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் கருவைக் கலைக்க முயன்று அவர் இறந்ததாகவும் குற்றம்சாட்டும் உறவினர்கள், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை சார்பில் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முறையான ஆவணங்களைப் பராமரிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனையின் ஸ்கேன் அறைக்கு சீல் வைத்ததுடன், மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement