செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கண்ணை உருட்டி...நாக்கில் சூடம் ஏற்றி பெட்ரோல் ஊற்றி.. கூச்சலிட்டும் பயனில்லை நீர் நிலையை ஆக்கிரமித்த கோயில் இடிப்பு..! வேலி அமைக்க முயன்றதால் மொத்தமா போச்சு

Aug 15, 2024 06:29:44 AM

மதுரை திருமங்கலம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோவிலை இடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை கட்டியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  நாக்கில் சூடம் ஏற்றி சாமி ஆடியும், பெட்ரோல் ஊற்றிக் கொண்டும்  போராட்டம் நடத்தினர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார் கோவிலை பொக்லைனை வைத்து இடித்தனர்

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செய்த ஆவேச போராட்ட காட்சிகள் தான் இவை..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வேப்பங்குளம் கிராமத்தில் இருந்த மருதூர் அம்மன் கோவிலை சுற்றி கோவில் நிர்வாகிகள் வேலி அமைக்க முற்பட்டனர். அப்போது கோவில் அருகே பட்டா நிலத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் பிரச்சனை முற்றிய நிலையில், கோயில் அமைந்திருப்பது நீர் நிலைப்பகுதி என்றும், அதனை சுற்றி வேலி அமைப்பதால் தாங்கள் பயன்படுத்தும் வழி அடைக்கப்படும் என்றும், பட்டா நிலத்தில் வசித்து வரும் லிங்கசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்தக்கோயில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதால் , கோவிலையும், நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவிலை அகற்றாததால் லிங்கசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். கோவிலை இடிக்க மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சமாதானக்கூட்டமும் பலனலிக்கவில்லை. இதை அடுத்து புதன்கிழமை காலை கோவிலை இடிப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் திருமங்கலம் டி.எஸ்.பி அருள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

கோவில் நிர்வாகிகள் தரப்பு கிராம மக்கள் கோவிலை இடிக்க விடாமல் தடுத்தனர். சாமி ஆடியும் எச்சரித்தனர்

2 மாணவர்கள் , உள்ளிட்ட 4 பேர் கோவில் மீது ஏரி பெட்ரோல் ஊற்றி போலீசாரை அச்சுறுத்தினர். அவர்களை மீட்டு போலீசார் கீழே கொண்டு வந்தனர்

கோவிலுக்குள் பூட்டிக் கொண்டு சிலர் வெளியேவர மறுத்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கோவில் இடிக்கப்பட்டது .


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement