செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிறுமி உயிரிழப்புக்கு dailee குளிர்பானம் காரணமா..? அமைச்சர் மா.சு அதிரடி உத்தரவு

Aug 13, 2024 11:27:00 AM

பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த 6 வயதுச் சிறுமி, வாயில் நுரைதள்ளி பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த குளிர்பானத்தை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் காவியா ஸ்ரீ என்ற 6 வயது மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும், அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

சனிக்கிழமை காவியாஸ்ரீ மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளிய நிலையில் சிறுமி மயங்கி விழுந்த நிலையில், இதனைக் கண்ட பெற்றோர் காவியாஸ்ரீயை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குழந்தை காவியாஸ்ரீ உயிரிழந்ததால் பெற்றோர் கதறி அழுதனர். தந்தை ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் தூசி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தனது மகள், அருகில் உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே இறந்ததாகவும், அந்த பாட்டிலில் தயாரிப்பு தேதி காலாவதி தேதிகள் எதுவும் அச்சிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டிய தந்தை ராஜ்குமார், இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்

இதுகுறித்து உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குளிர்பானத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட குளிர்பான பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாகவும், ஆய்வு முடிவுகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொதுவாகவே சிறுவர், சிறுமியருக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், முற்றிலும் ரசாயண சுவையூட்டி, நிறமிகளால் உருவாக்கப்படும் மாம்பழ குளிர்பானங்கள் காலாவதியானால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் என்றும், சிலருக்கு இளம்வயதில் புற்றுநோய், சர்க்கரை நோய், எலும்பு சிதைவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். கூடுமானவரை பழச்சாறு, லஸ்ஸி, மோர், இளநீர் போன்றவற்றை குழந்தைகள் பருகலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement