செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆளை மாற்றிய காதலி.. ஏமாந்து போய் சோற்றில் விஷத்தை கலந்த காதலன்..! சாகும் தறுவாயில் நண்பனுக்கு சம்பவம்

Aug 13, 2024 11:26:39 AM

ஓசூர் அருகே காதலி தன்னை ஏமாற்றிவிட்டு நண்பனை காதலிப்பதை அறிந்த இளைஞர் ஒருவர், காதலிக்கு வீடியோ கால் செய்து, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கக்கதாசம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகேஷ். டெம்போ டிரைவரான இவரும், ஒசூர் மாநகராட்சி பேகேப்பள்ளியை சேர்ந்த பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அந்தப்பெண்ணுடன் அகேஷ் தினந்தோறும் பலமுறை வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதற்கிடையே அகேஷை காதலித்த அந்தப்பெண், அகேஷின் நண்பனான சரண் என்பவருடனும் நட்பாக பழகி அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண் அகேஷை கழற்றிவிட்டதால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அகேஷ் விபரீத முடிவெடுத்தார். தான் தற்கொலை செய்துகொள்வதை தனது காதலி பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணை வீடியோ காலில் அழைத்துள்ளார்.

அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த போதே, சோற்றில் விஷம் கலந்து அழுதபடியே சாப்பிட்டுள்ளார் அகேஷ். இதனை அந்தப்பெண் அலட்சியப்படுத்தியதோடு, கிண்டலடித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அகேஷ், விரக்தியின் உச்சிக்கே சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பலமுறை அப்பெண்ணிடம் பேசியும் பலனில்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட அகேஷ் கிளைமேக்ஸில் வைத்ததுதான் மெகா டுவிஸ்ட்டு. தனது சாவுக்கு அந்தப்பெண் காரணமில்லை என்றும் தனது உயிரிழப்பிற்கு அந்தப்பெண்ணை காதலித்து வந்த தனது துரோக நண்பர் சரண் தான் காரணம் எனக்கூறி உயிரிழந்ததால் போலீசார் சரணை பிடித்து விசாரித்து வருகின்றனர். அகேஷின் மற்ற நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுக்குறித்து தளி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement