செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

துறைமுக அதிகாரிகளை மறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ வம்பு.. பேனரில் பெயர் இல்லை.. கல்லூரிக்குள் புகுந்து கோஷம்..!

Aug 13, 2024 11:27:30 AM

பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தால் 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லாததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், துறைமுகசபைத் தலைவரை மறித்து வாக்குவாதம் செய்து கருப்பு கொடியுடன் கோஷமிட்டார்...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் 5.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. கட்டிடத்திறப்பு விழாவுக்கு அழைப்பு அனுப்பபடாவிட்டாலும், விழாவுக்கு முன் கூட்டியே வந்த எம்.எல்.ஏ துரைசந்திரசேகர் பேனரில் கூட தனது பெயர் இல்லாததை கண்டு கோபத்தில் வாசலில் காத்திருந்தார்.

அப்போது திறப்பு விழாவுக்கு வருகை தந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் ஐஏஎஸ்சை மறித்து வாக்கு வாதம் செய்து உள்ளே போகவிடாமல் தடுத்தார்.

அவர் காரில் இருந்து இறங்கி கல்லூரிக்குள் நடந்து சென்றார். கல்லூரிக்குள் சென்ற சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ் ,மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா ஆகியோர் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தன்னை சட்டை செய்யாமல் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் உடனடியாக கூட்டணிக் கட்சியினரை கருப்புக்கொடியுடன் வரவழைத்தார். புதிய கட்டிட வாசலில் நின்று கொண்டு சுனில் பாலிவாலிலை கண்டித்து எதிர்ப்புக் கோஷமிட்டனர்..

இந்த கட்டிடம் மத்திய அரசின் துறைமுக நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்படுவதால் எம்.எல்.ஏவை அழைக்கவில்லை என்று மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா சமாதானம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்க மறுத்து அவரிடம் எம்.எல்.ஏவும், ஆதரவாளர்களும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து கோஷம் மிட்டுக்கொண்டே இருந்ததால், திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர்கள் அங்கே இருந்து புறப்பட்டுச்சென்றனர். அப்போதும் எம்.எல்.ஏவும் ஆதரவாளர்களும் கோசமிட்டபடியே அவரது வாகனத்தை பின் தொடர்ந்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement