செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சொல்லால் அடித்த ரூபிணி.. தாய்மாமன் சீதனத்தை திருப்பிக் கொடுத்து அக்கா ஆவேசம்

Aug 11, 2024 08:52:25 AM

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தாய்மாமன் சீர்செய்ததால் தனது கணவர் கடனாளியாகி விட்டதாக தம்பி மனைவி திட்டியதால் ஆத்திரம் அடைந்த சகோதரி, 2 வருடம் கழித்து ஊராரையும், உறவினர்களையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று சீர்வரிசையை திருப்பி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மாமன் சீர் கொடுத்ததை சொல்லிக்காட்டிய தம்பி மனைவிக்கு சீரை திருப்பிக் கொடுத்த காட்சிகள் தான் இவை..

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீழ் நெடுங்கல் காலனியைச் சேர்ந்தவர் மீனா. கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இந்த நிலையில் கைம்பெண் மீனா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் வினிதா வுக்கு கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து எளிய முறையில் மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினார்.

அப்போது மீனாவின் தம்பி சரவணன் தாய்மாமன் சீதனமாக , புத்தாடை, பழங்கள், பாய், தலையணை, தட்டு, உட்பட 2500 ரூபாய் ரொக்கத்துடன் சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கியதாக கூறப்படுகின்றது.

அதன்பின்னர் சரவணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செலவு செய்ததால் தான் தனது வீட்டுக்காரர் கடனாளி ஆனதாக, சரவணனின் மனைவி ஊர் மக்களிடம் குறை கூறி வந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் மஞ்சள் நீராட்டு விழாவில் வழங்கிய சீதனத்தையும் பணத்தையும் திருப்பி கொடு என்று மீனாவிடம் , ரூபினி தொடர்ந்து வற்புறுத்தி சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மீனா அவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவின் போது தாய்மாமன் சீர்வரிசையாக தம்பி சரவணன் வழங்கிய பொருட்கள் மற்றும் பணம் திருப்பி தர முடிவு செய்தார்

பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை, தட்டு , மற்றும் ரொக்கம் 2500 ரூபாய் உட்பட சீர்வரிசையை உறவினர்களுடன் எடுத்துச் சென்று ரூபினி வீட்டு வாசலில் வைத்தார். "மானங்கெட்ட தாய்மாமன் சீதனத்தை நீயே எடுத்துக்க," என்று ரூபினிக்கு பதில் அடி கொடுத்தார்.

தாய்மாமன் சீர்வரிசையை சகோதரி திருப்பிக் கொடுத்த இச் சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement