செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கோவைக்கு புதிய மேயர்.. இலவு காத்த கிளிகளான கவுன்சிலர்கள் கண்ணீர்..! ஆதங்க குரலை அடக்கிய அமைச்சர்கள்

Aug 07, 2024 06:48:47 AM

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக 29- வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் பதவி கிடைக்கும் எனக் காத்திருந்த தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கண்ணீர் விட்டு அழுதும், ஆவேசமாக பேசியும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கோவை மாநகராட்சியின் மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அடுத்த மேயர் தாங்கள் தான் என்று கவுன்சிலர்கள் மீனா லோகு, லட்சுமி இளஞ்செல்வி, சாந்தி முருகன்ஆகியோர் எதிர்பார்ப்பில் காய்களை நகர்த்தி வந்தனர். காளப்பட்டியில் நடந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையிலான கூட்டத்தில் 29 வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி பெயர் புதிய மேயர் என்று அறிவிக்கப்பட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மீனா லோகு கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு முன்னதாக தனியார் பள்ளி கூடத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையில் கவுன்சிலர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் கவுன்சிலர் சாந்தி முருகன் எழுந்து ஆதங்கத்தை கொட்டினார்.

இதையடுத்து புலம்பி அழுதபடியே வெளியில் வந்த சாந்திமுருகனை சக பெண் கவுன்சிலர்களும், அவரது கணவரும் தோளில் தட்டி சமாதானப்படுத்தினர்.

அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது, அமைச்சர்கள் இருக்கிறார்கள் பேசவேண்டாம் என்று விடாமல் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து மறைமுக தேர்தலில் கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, செங்கோல் வழங்கி மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர். அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் வேறு வழியின்றி சோகம் தோய்ந்த முகத்துடனே சென்று கோவையின் 2ஆவது பெண் மேயரான ரங்கநாயகிக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement