செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரசு போஸ்டரில் ஜெயலலிதாவா..? ஆட்சி மாறி 3 வருடமாகிறது.. ஆவேசமான அமைச்சர் மா.சு..! தலைமை மருத்துவர் பணியிட மாற்றம்

Aug 06, 2024 08:55:26 PM

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு சி.டி.ஸ்கேன் அறை கொரானா காலத்திற்கு பின்னர் சுத்தம் செய்யப்படவில்லை என்பதை அறிந்து மருத்துவமனையின் தமைமை மருத்துவரை இடமாற்றம் செய்தார்.

ஆட்சி மாறி 3 வருடமாகிறது இன்னும் பழைய சி.எம். படத்தோட போஸ்டர் ஒட்டி இருக்கீங்க... ஆட்சி மாறுனதே தெரியலன்னா உங்களதான் மாற்றனும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆவேசமான இடம் பரமக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனை.

மருத்துவமனைக்கு காலையில் திடீர் ஆய்வுக்கு சென்ற அமைச்சர், அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தார்.

மகப்பேறு மருத்துவமனையின் உள்பகுதியில் பல இடங்களில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா படத்துடன் மக்கள் நல்வாழ்வுத்துறையின் போஸ்டர்கள் காணப்பட்டது. இதனை கண்டதும் , ஆவேசமான அமைச்சர் ஆட்சி மாறி 3 வருடமாகிறது தெரியுமா ? என்று தலைமை மருத்துவரை கடிந்து கொண்டார்.

தொடர்ந்து சி.டி.ஸ்கேன் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பழைய அட்டை பெட்டிகள், பேப்பர்கள் என குடோன் போல காணப்பட்டது. எப்போது கடைசியாக பயன் படுத்தப்பட்டது என்று விசாரித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். விசாரணையில் கொரோனா காலத்துக்கு பின்னர் அந்த அறை சுத்தம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து கூடுதல் மருத்துவமனை கட்டிட பணிகளை பார்வையிட்டு அதனை விரைவாக கட்டி முடிக்க அறிவுறுத்திய அமைச்சர், ஒப்பந்ததாரரை செல்போனில் அழைத்து பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் பிளாக் லிஸ்டில் வைக்க பரிந்துரைப்பேன் என்று எச்சரித்தார்.

பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7.15 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனையை முறையாக பராமரிக்காமல் வைத்திருந்ததாக பரமக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை இடமாற்றம் செய்திருப்பதாக தெரிவித்தார்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement